குரங்குகள் தொல்லை

Update: 2022-12-07 18:02 GMT
மா.புளியங்குடியில் கடந்த 6 மாத காலமாக குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது. இவைகள் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் கையில் இருக்கும் திண்பண்டங்களை பிடிங்கி செல்கின்றன. மேலும் திறந்து இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து செல்கின்றன. குரங்குகளை விரட்ட செல்லும் மக்களை கடிக்க சீரிப்பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்