நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டு வைடிப்பக்கம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த கம்பிகள் வாகனத்தின் டயரை பதம் பார்த்து விடுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.