நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் ராஜா வாய்க்கால் பாலம் உள்ளது. இவ்வழியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்பவர்கள் அந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். இந்த பாலத்தில் தடுப்பு சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் பாலத்தை கடந்து செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக ராஜா வாய்க்காலின் பாலத்தின் தடுப்பு சுவரை சரிசெய்ய வேண்டும்.
-முருகன், பரமத்திவேலூர், நாமக்கல்.