ஆழ்துளை கிணறு பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-12-07 16:38 GMT
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், காரக்கோட்டை ஊராட்சி 8-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பொதுமக்களின் நலன்கருதி அந்த பகுதியில் ரூ.23 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறும், ரூ.7 லட்சத்தில் குடிநீர் குழாயும் கடந்த ஓராண்டு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது வரை அவைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்