கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெண்களின் நலன் கருதி கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தரை சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது சுகாதார வளாகம் பழுதடைந்து அதை பயன்படுத்தாமல் இருந்தனர். இதனால் சுகாதார வளாகம் முழுவதும் பல்வேறு வகையான செடி, கொடிகள் மற்றும் சீமை கருவேலமரங்கள் முளைத்து சுகாதார வளாகத்தை மூடி மறைத்துள்ளது .இந்நிலையில் புதிய சுகாதார வளாகம் கட்டித் தரக்கோரி பலமுறை உள்ளாட்சித் துறை அதிகாரியிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.