சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள செஞ்சை நாட்டார் மங்கலம் கண்மாயில் அதலை செடிகள் ஆக்கிரமித்தும் புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதனால் கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீரானது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.