புகார் பெட்டி செய்தி எதிரொலி; சேதமடைந்த மின்கம்பம் சீரமைப்பு

Update: 2022-12-07 15:21 GMT
தென்காசி அருகே குணராமநல்லூர் பஞ்சாயத்து புல்லுகாட்டுவலசை பால்பண்ணை தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் இருப்பதாக அகிலன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியைச் சுற்றிலும் புதிதாக கான்கிரீட் அமைத்து சீரமைத்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்