கடற்கரையில் சுற்றும் கால்நடைகள்

Update: 2022-12-07 14:28 GMT


நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, நாகூர் கடற்கரையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த மாடுகள் இவை கடற்கரை பகுதிக்குள் குப்பைகளை இழுத்துவந்து போடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கடற்கரைக்கு வருபவர்களையும் மாடுகள் முட்டிவிடுகின்றன. இதன்காரணமாக கடற்கரைக்கு பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடற்கரையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள் வேளாங்கண்ணி

மேலும் செய்திகள்