பொதுமக்களை விரட்டும் தெருநாய்கள்

Update: 2022-12-07 14:24 GMT


நாகை மாவட்டம் சங்கமங்கலம் பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்தப்பகுதியில் பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். மேலும் இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன.தனியாக நடந்து செல்லும் சிறுவர்களை கடித்து விடுகின்றன. மேலும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் நாகை

மேலும் செய்திகள்