நாகர்கோவில்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பண்டாரபுரம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவை அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை கடிக்க துரத்துகின்றன. மேலும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்வதால் இருச்சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையில் சுற்றி திரியும் ெதருநாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.விஜேஷ், பண்டாரபுரம்.