ஆரணி காமராஜர் சிலை அருகில் இருந்து பழைய ஆற்றுப்பாலம் செல்லக்கூடிய புதிய ஆற்று மேம்பாலம் அமைக்கப்பட்ட பாதையில் இருந்த ஒரு பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனால், தற்போது வரை கட்டிட கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இடித்து அகற்றப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகவேந்திரன், ஆரணி.