மரத்தை அப்புறப்படுத்த வேண்டும்

Update: 2022-12-07 08:40 GMT

தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகத்தின் எதிர்புறத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் வகுப்பறை கட்டிடத்தின் முன்பகுதியில் நிற்கும் ஒரு தேக்குமரத்தின் அடிப்பகுதி மிகவும் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சூறைகாற்று, மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது மரம் கீழே விழுந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் நிற்கும் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், தக்கலை.

மேலும் செய்திகள்

மயான வசதி