சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் மழைகாலங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் தேங்கிய நீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உருவாகி உள்ளது. சுற்று வட்டார பகுதி மக்கள் கொசுக்கடியால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.