மயான சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-04 14:01 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட சித்துராஜபுரம் பஞ்சாயத்தில் அய்யனார்காலனி உள்ளது. இங்கு உள்ள அனைத்து சமுதாய மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மயானத்தில் தேவையற்ற செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் மயானத்தின் உள்ளே பாம்புகள் அதிகளவில் நடமாடி வருகிறது. இதனால் இறுதி சடங்கு செய்ய செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. மேலும் மயானத்தின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்