பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிலை பராமரிக்கப்படுமா?

Update: 2022-12-04 13:26 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக சிலை இருப்பதே தெரியாத அளவுக்கு அதனை சுற்றி மரக்கிளைகளும், செடிகளும் வளர்ந்துள்ளன. மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையும் மறைந்த நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சிலையை பராமரிக்கவும், செடி,கொடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்