கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி கவுண்டன்புதூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி குழந்தைகளின் நலன் கருதி அரசு ஆரம்பப்பள்ளி கட்டப்பட்டது. இந்த பள்ளியில் கவுண்டன்புதூர், செல்வநகர், எம்.ஜி.ஆர். நகர், செட்டித்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் படித்து வந்தனர். இந்நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததன் காரணமாக கவுண்டன்புதூரில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்பப்பள்ளியை கல்வித்துறை அதிகாரிகள் மூடிவிட்டனர். இதனால் இந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குழந்தைகளை பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இதனால் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சமூக ஆர்வம் கொண்ட ஆசிரியர்களை நியமித்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள குழந்தைகளை கவுண்டன்புதூர் அரசு பள்ளியில் சேர்த்து பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.