மணல் திருட்டு தடுக்கப்படுமா?

Update: 2022-12-04 11:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மைசூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆரணிபட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்த மணல் கடத்தலில் ஏறக்குறைய 15 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து டிராக்டர், மாட்டு வண்டி உதவியுடன் தினமும் இரவிலும், அதிகாலை நேரங்களிலும் மணலை கடத்தி தங்கள் குடியிருப்பு பகுதிகளில் எடுத்து வைத்து, பின்னர் வெளி மாவட்டங்களுக்கு லாரி மூலம் மணல் திருட்டு தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்