கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள குழந்தைகள் தெருவில் விளையாடும்போது அவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை வெளியே அனுப்ப பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.