மணல் கொள்ளை தடுக்கப்படுமா?

Update: 2022-11-30 16:48 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே மேல் தனியாலம்பட்டு மலட்டாற்றில் இரவு நேரத்தில் மணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் சுமார் 10 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளதால் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்