விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே கோபாலபுரத்தில் பயிர்களை உலர வைக்க உலர்களமானது அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த களமானது சேதமடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை காயவைக்கமுடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த களத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.