கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி, வெள்ளியணை கிளை நூலகம், 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் முன்பு சில மாததிற்கு முன் சாலையை அகலபடுத்தல் பணி நடைபெற்றது. பணி முழுமையாக முடிந்தநிலையில் சாலையின் இருபுறமும் சாலைக்கு மண்நிரப்ப பள்ளம் தோண்டப்பட்டது. சாலைக்கு மண் போடப்பட்டு உயர்த்தப்பட்ட நிலையில் ஏற்கனவே பள்ளமாக இருந்த இடம் மேலும் பள்ளமாக உள்ளது. இதனால் மழைபெய்யும் போது மழைநீர் செல்ல வழியின் தேங்கி நிற்கிறது. மேலும் சேறும், சகதியுமாக இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நூலகம் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் அவசரகாலத்தில் உடனே எடுக்கமுடியாமல் சேற்றில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த அலுவலகம் முன்பு இரவு நேரத்தில் தெருவிளக்கு இல்லாமல் உள்ளதால் சில சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மது அருந்தி விட்டு தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
