பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தினந்தோறும் இரவு நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மர்மநபர்கள் மது அருந்திவிட்டு, பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கிறார்கள். மேலும் பள்ளியில் உள்ள ஓடுகளையும் உடைக்கிறார்கள். இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.