சாலையோரம் உள்ள கிணறு

Update: 2022-11-27 13:34 GMT
கரூர் மாவட்டம், கட்டிபாளையம் பகுதியில் இருந்து திருக்காடுதுறை வழியாக நத்தமேடுக்கு புகழூர் வாய்க்கால் வழியாக செல்வதற்காக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார்சாலை வழியாக விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கட்டிபாளையம் பகுதியில் இருந்து திருக்காடுதுறை செல்லும் புகழூர் வாய்க்கால் தார்சாலை ஓரத்தில் விவசாய கிணறு ஒன்று வெட்டப்பட்டுள்ளது. அந்த விவசாய கிணற்றில் தண்ணீர் நிறைய உள்ளது. இந்த விவசாய கிணற்றில் தண்ணீர் இறைக்கி இறைக்க கிணறு அகலம் ஆகி கொண்டுள்ளது. இதன் காரணமாக தார் சாலை தொடர்ந்து கிணற்றுக்குள் விழுந்து தார் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அதன் காரணமாக அந்த வழியாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி செல்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்