இருக்கை வசதி தேவை

Update: 2022-11-27 13:18 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் செம்மேட்டில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்திற்கு வரும் மலைவாழ் மக்கள் நுழைவு வாயில் பகுதியில் உட்கார இடம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள புல்வெளிகளில் அமருகின்றனர். எனவே அங்கு வரும் மலைவாழ் மக்களுக்கு இருக்கை அமைத்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

-அக்னி முருகேசன், செம்மேடு, நாமக்கல்.

மேலும் செய்திகள்