தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-11-27 11:59 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி நச்சலூர் அரசு மருத்துவமனை முன் பட்டுப்போன நிலையில் மரம் ஒன்று இருந்தது. இந்த மரம் மக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டுப்போன நிலையில் இருந்த அந்த மரத்தை அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்