தெருநாய்கள் தொல்லை

Update: 2022-11-23 15:59 GMT
கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் கடைவீதி பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை ஆங்காங்கே கூட்டமாக நின்றுகொண்டு, இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்