சிவகங்கை மாவட்டம் திருகோஷ்டியூர் பகுதியில் ஏராளமான நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது மோதுவதால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறன்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.