மரக்கிளை அகற்றப்பட்டது

Update: 2022-11-23 12:05 GMT

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இனயம் பகுதியில் ஓடக்கரையில் இருந்து ரேசன்கடை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் புளிமரம் ஒன்று வாகன போக்குவரத்து இடையூறாக வளர்ந்து காணப்படுகிறது. இதனால் ரேசன்கடைக்கு பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் மற்றும் பள்ளி வாகனங்களின் டிரைவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றிய செய்தி தினந்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இடையூறாக காணப்பட்ட மரக்கிளையை வெட்டி அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-அப்துல் ரசாக், இனயம்.

மேலும் செய்திகள்