பெயர் பலகை இல்லாத ஊர்

Update: 2022-11-23 11:59 GMT

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் 3 நுழைவுப்பகுதிகளிலும் ஊரின் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து லாடபுரத்திற்கு வரும் மக்கள் ஊர் பெயர் தெரியாமல் சுற்றித்திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக தொலைவுக்கு சென்று மீண்டும் திரும்பி வரும் அவலநிலை உள்ளது. இதேபோல் துறையூர்-பெரம்பலூர் சாலையில் இருந்து லாடபுரம் செல்லும் சாலையில் குறுகிய பாலம் உள்ளது. அங்கேயும் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்