மதுரை ஒத்தக்கடை மேலூர் மெயின் ரோட்டில் ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகள் மீது வாகனஓட்டிகள் சிலர் மோதிவிட்டு நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால் கால்நடைகள் விபத்தில் சிக்கி காயமடைவதுடன் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கோ சாலை அமைத்து பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?