கடலூர் துறைமுகம் தைக்கால் தோணித்துறை கருப்பு முத்தம்மன் கோவில் அருகே பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் அங்குள்ள குப்பைகளை கிளறுவதோடு, சேற்றில் புரண்டும் எழுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், மாநகர மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அட்டூழியம் செய்து வரும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.