சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களின் மீது நாய்கள் குறுக்கிடுவதால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே இந்த நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.