கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் உள்ள கழிப்பறை தகுந்த பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பெண்களுக்கு என்று தனி கழிப்பறை இல்லை. எனவே நூலகத்தில் உள்ள கழிப்பறையை சீரமைத்து, தகுந்த முறையில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.