அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மக்கள்

Update: 2022-11-13 13:03 GMT
அரியலூர் மாவட்டம், கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் உள்ள பாண்டியன் ஏரியை சிலர் ஆக்கிரமித்து வசித்து வந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அவர்களுக்கு அரசு வீட்டுமனை வழங்கியது. இதையடுத்து அவர்கள் அந்த இடத்தில் குடியேறி வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் தெருவிளக்கு வசதி இன்றி இப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு வசதி ஏற்படுத்துவதுடன் தெகுப்பு வீடுகள் கட்டிடத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்