பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்

Update: 2022-11-13 11:57 GMT

தஞ்சை அடுத்துள்ள சூரக்கோட்டை அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. இவை வீட்டில் உள்ளே சென்று உணவு பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. மேலும் அந்த பகுதியில் விளையாடும் குழந்தைகளை கடித்து விடுகிறது. இந்த குரங்குகளை பொதுமக்கள் விரட்டும் போது அவர்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்