நல்லூர் அருகே ஓ.கீரனூர் காலனி பகுதியில் உள்ள சுடுகாட்டை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சுடுகாட்டை பயன்படுத்த அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.