கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-07-16 16:54 GMT

தஞ்சையில் பல்வேறு இடங்களில் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. எம். கே. மூப்பனார் சாலை, தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ்நகர், சோழன் நகர் உள்பட தஞ்சை நகரில் மாலை நேரத்தில் கொசுக்களின் படைஎடுப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் கொசுத்தொல்லையால் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாலை நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்