சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன் சிலரை கடிக்கவும் செய்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.