சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் வழியில் பொம்மசமுத்திரம் ஏரி உள்ளது. அந்த ்வழியாக கொல்லிமலைக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் ஏரிக்கரை பகுதியில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்ல அச்சப்படுகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு ஏரிக்கரை பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரதீப், காந்திபுரம்.