கோவை கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் செல்லும் சாலையில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டனர். ஆனால் புதிய கட்டிடம் கட்டவில்லை. இதனால் வகுப்பறை பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். எனவே கூடுதல் வகுப்பறை கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.