விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் கழிவறை மற்றும் பயணிகள் இருக்கை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே குப்பைகள் சூழ்ந்து சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.