விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பங்களா தெரு வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு பின்புறம் உள்ள அடிபம்பு அருகில் கற்கள் கோபுரமாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கற்கள் குவியலில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள கற்கள் குவியலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.