விருதுநகர் அருகே குல்லூர்சந்தை புதிய காலனியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. அதன் அருகே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியும் சேதமடைந்துள்ளதால் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே அங்கன்வாடி மைய கட்டிடம், மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.