தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-11-02 12:41 GMT
பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சியில் செங்குணம், அருமடல், பாலாம்பாடி, சறுக்குபாலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 1,474 குடும்பங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனி நபர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் நாள்தோறும் காலை 6 மணிக்கு எம்.எம்.எஸ். போட்டோ எடுக்கப்படுகிறது. இதனால் காலையில் சமைப்பது, தண்ணீர் எடுப்பது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட சிரமங்கள் பணியாளர்களுக்கு ஏற்படுகிறது. எனவே பழைய வழக்கப்படி வேலை நடைபெறும் இடத்தில் எம்.எம்.எஸ். போட்டோ எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது செங்குணம் ஊராட்சியில் எம்.எம்.எஸ். போட்டோ, பணி நடைபெறும் இடத்தில் எடுக்கப்படுகிறது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை‌ எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்