பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடி ஊராட்சி வயலப்பாடி கீரனூர் பஸ் நிறுத்தம் முன்பு கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் இந்த நீர்தேக்க தொட்டியின் கீழ் அமர்ந்து பஸ் ஏறி செல்கிறார்கள். இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் அதிகப்படியான உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.