குரங்குகள் தொல்லை

Update: 2022-10-30 13:53 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுச்சேரி கிராம பஸ் நிறுத்தத்தின் நிழற்குடையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் அமர்துகொண்டு அங்கு இருக்கும் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து மளிகை பொருட்களை எடுத்துசென்றுவிடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்