சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரில் மதுரை-பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கண்மாய்களுக்கு செல்ல பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த பாலங்கள் சேதமடையும் நிலையில் விரிசலடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாலங்களை ஆய்வு செய்து அதனை சீரமைக்க வேண்டும்.