பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் இருந்து புது அம்மாபாளையம் செல்லும் குறுக்கு தார் சாலையில் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் அடர்ந்த முட்களால் சூழப்பட்டு எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பாதை அடைபட்டுள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையில் உள்ள முட்களை வெட்டி சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.