சட்ட விரோத மது விற்பனை

Update: 2022-10-26 12:33 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பள்ளி மைதானத்தின் அருகில் உள்ள தோப்பில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களும், மாணவ மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மது அருந்துபவர்களால் மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்