கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலையில் கரூர்- ஈரோடு செல்லும் நெடுஞ்சாலை அருகே தார் சாலையின் ஓரத்தில் அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் பஸ் நின்று செல்லும் இடத்தில் கட்டாமல் சிறிது தூரத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளதால் அந்த நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பயனற்று போய் உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அருகே பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.